சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான 'அரண்மனை 3' திரைப்படம் நாளை(அக்-14) திரையரங்கில் வெளியாகிறது.
நகைச்சுவை பாணியில் உருவாக்கப்பட்ட ஹாரர் படங்களில் ஒன்றான ’அரண்மனை’ வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதோடு வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | பிக்பாஸில் அபிஷேக் சொன்ன கதை எப்படி இருந்தது?: ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியின் அதிரடி விமரிசனம்
அதன்பின் தொடர்ந்து அதன் இராண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது மூன்றாம் பாகமான ‘அரண்மனை 3’ தயாராகி விட்டதால் இப்படம் நாளை அக்டோபர்-14 அன்று திரையரங்கில் வெளியாகிறது.
இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்டோருடன் இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சத்யா.சி இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.