செய்திகள்

நடிகையின் காருக்குள் அத்துமீறி நுழைந்த நபர்: பரபரப்பு சம்பவம்

பிரபல நடிகையின் காருக்குள் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். மேலும் குஷி படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். 

இவருக்கும் ராஜ் குந்த்ரா என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் தனது மகளுடன் கலந்துகொண்ட ஷில்பா ஷெட்டி பின்னர் வீடு திரும்ப தன் காரில் ஏறினார். அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் காரில் ஏறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷில்பா ஷெட்டி சத்தம்போட்டுள்ளார். அங்கிருந்த பாதுகாவலர்கள் காரில் ஏறிய நபரை காரிலிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனை மையங்களைக் குறைக்கிறது ஓலா எலக்ட்ரிக்: 550-ஆக சுருக்கத் திட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மேற்கு வங்கத்தின் நிலை கவலையளிக்கிறது: மம்தா ஆட்சி மீது பிரதமா் விமா்சனம்

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லை, தென்காசியில் மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

SCROLL FOR NEXT