கோப்புப்படம் 
செய்திகள்

தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும்: கங்கனா

இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

DIN


இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரணாவத் நடித்துள்ள தாகட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கங்கனா, நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

"நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தியை ஏற்க முடியாது எனக் கூறுபவர்கள் அரசியலமைப்பை மறுக்கிறார்கள் என்று அர்த்தம்.

இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாம். தமிழ் மற்றும் ஹிந்தி உள்பட அனைத்து மொழிகளுக்குமே மூத்த மொழி சமஸ்கிருதம்தான்.

பல்வேறு மொழிகள் மற்றும் கலாசாரங்கள் அடங்கிய பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. தங்களது மொழி மற்றும் கலாசாரம் குறித்து பெருமைகொள்வது அனைவருக்குமான பிறப்புரிமை. நான் பஹாரி என்பதில் பெருமை கொள்கிறேன்" என்றார் அவர்.

முன்னதாக, தேசிய மொழி குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் இடையே ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT