செய்திகள்

8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி - தெலுங்கு தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு

இனி திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகே திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். 

DIN

இனி திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகே திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். 

புஷ்பா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட தெலுங்கு படங்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் பெரும்பாலான படங்கள் திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. 

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகின்றன. இதனால் காத்திருந்து படங்களை ஓடிடியிலேயே பார்த்துவிடலாம் என்ற எண்ணம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. 

இதற்கு தீர்வு காண ஆகஸ்ட் 1 முதல் தெலுங்கு படங்களின் தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்க தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தனர். இந்த நிலையில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்ற முடிவு தற்பொழுது கையெழுத்தாகியுள்ளதாம். இந்த முடிவு திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களை அதிகரிக்குமா என்பது வெகு விரைவில் தெரிந்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT