செய்திகள்

8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி - தெலுங்கு தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு

இனி திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகே திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். 

DIN

இனி திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகே திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். 

புஷ்பா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட தெலுங்கு படங்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் பெரும்பாலான படங்கள் திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. 

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகின்றன. இதனால் காத்திருந்து படங்களை ஓடிடியிலேயே பார்த்துவிடலாம் என்ற எண்ணம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. 

இதற்கு தீர்வு காண ஆகஸ்ட் 1 முதல் தெலுங்கு படங்களின் தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்க தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தனர். இந்த நிலையில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்ற முடிவு தற்பொழுது கையெழுத்தாகியுள்ளதாம். இந்த முடிவு திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களை அதிகரிக்குமா என்பது வெகு விரைவில் தெரிந்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்; திரளானோா் பங்கேற்பு

செங்கல் சூளைகள் புகைப்போக்கி அமைத்து பதிவு சான்று பெற அறிவுறுத்தல்

கீழாம்பூரில் பெண் கரடி உடல் மீட்பு

ரிதன்யா முதல் நிக்கி பாட்டீ வரை...உயிரைப் பறிக்கும் வரதட்சிணைக் கொடுமையை ஒழிப்பது எப்போது?

SCROLL FOR NEXT