செய்திகள்

திருச்சியில் கோப்ரா படக்குழு: விமான நிலையத்தில் திரண்ட விக்ரம் ரசிகர்கள்

DIN

திருச்சி: திரைப்பட நடிகர் விக்ரம் மற்றும் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், முன்னணி நடிகர்கள் நடிக்கும் கோப்ரா திரைப்படம் வருகிற 31ம் தேதி திரையில் வெளியிடப்பட உள்ளது.

இதனையொட்டி படக்குழுவினர் திருச்சி மற்றும் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களையும் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாட உள்ளனர்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்த நடிகர் விக்ரம் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்தனர், பயணிகள் உள்ளே செல்லும் பாதைக்கு ரசிகர்கள் ஓடி வந்தனர். அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவிக்க முற்பட்டனர். 

விமானநிலைய வருகை இடத்திலேயே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடியடி, மிதித்து விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை பார்த்து நடிகர் விக்ரம் கையசைத்தும், முத்தமிட்டபடியும் தனது வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறினார். தொடர்ந்து ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் பவுன்சர்களுடன் நடந்து சென்றபடி காரில் ஏறி விரைந்து சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT