செய்திகள்

''படம் ஓடாததற்கு காரணம் ஹீரோவின் திமிர் பேச்சு'' - திரையரங்க உரிமையாளர் அதிரடி

படம் ஓடாததற்கு ஹீரோவின் திமிர் பேச்சுதான் காரணம் என பிரபல திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

DIN

படம் ஓடாததற்கு ஹீரோவின் திமிர் பேச்சுதான் காரணம் என பிரபல திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்று கூறப்படுகிறது. 

முன்னதாக லைகர் படத்தைப் புறக்கணியுங்கள் என்று கூறி பாய்காட் லைகர் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர். இதுகுறித்து விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டபோது 'என் படத்தைப் பிடித்தால் பாருங்கள்' என்று கூறியிருந்தார். 

திரையரங்க உரிமையாளர் மனோஜ் தேசாயுடன் விஜய் தேவரகொண்டா

இந்த நிலையில் படம் ஓடாததற்கு  விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சுதான் காரணம், நடிகர்கள் ரசிகர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும் என மும்பையைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் மனோஜ் தேசாய் தெரிவித்தார். அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனைக் கேள்விப்பட்ட விஜய் தேவரகொண்டா உடனடியாக மும்பை விரைந்து மனோஜ் தேசாய்யை சந்தித்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT