செய்திகள்

சூர்யா படத்தைக் கைப்பற்றிய உதயநிதி

DIN

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக திரைப்படங்களை தயாரிப்பது, விநியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த, அரண்மனை 3 படங்களை தமிழகத்தில் வெளியிட்டார். 

இந்த நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தின் வெளியீட்டு உரிமையைும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

வாரணம் ஆயிரம் படத்துக்கு பிறகு இந்தப் படத்தின் மூலம் சூர்யாவோடு ரத்னவேலு இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT