செய்திகள்

சிரஞ்சீவியின் ஆச்சாரியா வெளியீடு ஒத்திவைப்பு - சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ?

DIN

கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருந்த நடிகர் அஜித்தின் வலிமை, ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து சிறிய முதலீட்டில் உருவான படங்கள் பொங்கலுக்கு வெளியாகின. 

இந்த நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவிருந்த சிரஞ்சீவி - ராம் சரண் இணைந்து நடித்த ஆச்சாரியா படத்தின் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ''கரோனா பரவல் தீவிரமடைந்து இருப்பதால் ஆச்சரியா படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். எல்லோருக்கும் சங்கராந்தி நல்வாழ்த்துகள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீடும் தள்ளிப்போகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT