தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய தினம் கடைசி நாள் என்பதால் போட்டியில் வெல்லப்போவது யார் என்பது இன்று அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார். அப்போது சிவகார்த்திகேயனை தனது படத்தின் கதாநாயாகன் என கமல் அறிமுகப்படுத்துகிறார்.
இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் பேசும் சிவகார்த்திகேயன், என்னால் அலைபேசி இல்லாமல் 3 மணி நேரம் கூட இருக்க முடியாது. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ. பிக்பாஸ் வீட்டில் நிறைய நாட்கள் இருக்கும் அனைவருமே வெற்றியாளர்கள் தான். 3 பேருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனாக நடிக்கவிருக்கிறார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படம் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் பிக்பாஸ் மேடையில் வெளியிடுவார். அதற்காகவே சிவகார்த்திகேயன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.