செய்திகள்

லதா மங்கேஷ்கர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்: மருத்துவமனை நிர்வாகம்

DIN


கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு (92) தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கடந்த வாரம் தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

அவரது வயதைக் கருத்தில் கொண்டு, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன்படி, அவர் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

அவரது உடல்நிலை குறித்த சமீபத்திய தகவலைப் பற்றி அவருக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறியதாவது:

"லதா மங்கேஷ்கர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வயது காரணமாக அவர் குணமடைய நேரம் எடுக்கும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT