செய்திகள்

ஒரே டேக்கில் நடிகர் சிவாஜியின் வசனத்தை பேசி அசத்திய மம்மூட்டி - வெளியானது நண்பகல் நேரத்து மயக்கம் டீசர்

நண்பகல் நேரத்து மயக்கம் மலையாள பட டீசரில் நடிகர் சிவாஜி கணேசனின் கௌரம் பட வசனத்தை நடிகர் மம்மூட்டி ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். 

DIN

நண்பகல் நேரத்து மயக்கம் மலையாள பட டீசரில் நடிகர் சிவாஜி கணேசனின் கௌரம் பட வசனத்தை நடிகர் மம்மூட்டி ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். 

ஆமேன், அங்கமாலி டைரிஸ், ஈமாயூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவரது ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தற்போது மம்மூட்டி முதன்மை வேடத்தில் நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மறைந்த நடிகர் பூ ராமு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

பூ ராமு மறைவுக்கு நடிகர் மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான பூ ராமுவின் மறைவைக் கேட்டு வருத்தமடைந்தேன். நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் பங்குபெற்றதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

நண்பகல் நேரத்து மயக்கம் பட முதல் டீசர் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், தற்போது இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் மதுக்கூடம் ஒன்றில் மது அருந்தும் மம்மூட்டி, இரட்டை வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்த கௌரம் பட வசனத்தை அட்டகாசமாய் பேசி அசத்தியுள்ளார். 

நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை நடிகர் மம்மூட்டியின் மம்மூட்டி கம்பெனி நிறுவனமும் ஆமென் மூவி மோனஸ்டெரி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 17 கிராமங்கள் தோ்வு: திருவள்ளூா் ஆட்சியா்

SCROLL FOR NEXT