செய்திகள்

படப்பிடிப்புக்கு நடுவே மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன்: ''சினிமாவில் நடிக்கிறது...''

DIN


சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, புதுச்சேரி, லண்டன் போன்ற இடங்களில் நடைபெறவிருக்கிறது.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. அப்போது பள்ளி விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.  

அப்போது பேசிய அவர், ''எல்லோருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. அதனை நீங்கள் முதலில் நம்பவேண்டும். நாமே நம்மை நம்பவில்லையென்றால், மற்றவர்கள் நம்மை நம்பவில்லை என சொல்வதில் அர்த்தம் இல்லை. 

எந்த திறமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். சினிமாவில் நடிக்கிறது மட்டும்தான் பெரிய விஷயம் இல்லை. அழகாக ஓவியம் வரைவது, நன்றாக பாடுவது, நம் மொழியை சிறப்பாக பேசுவது, எழுதுவது என திறமைகள் உங்களுக்குள் இருக்கிறது. அதனை சரியான நேரத்தில் தேடிக் கண்டுபிடித்துவிடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT