செய்திகள்

மீண்டும் திரைப்படம் இயக்கவிருக்கும் எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் திரைப்படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் திரைப்படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது விஷாலின் மார்க் ஆண்டனி, ஷங்கர் - ராம் சரண் படம் ஆகிய இரண்டு படங்களில் வில்லனாக நடித்துவருகிறார். ஸ்பைடர், மெர்சல், மாநாடு என இவர் வில்லனாக நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

இதன் காரணமாக இவருக்கு வில்லன் வேடமே தொடர்ச்சியாக கிடைப்பதாக கூறப்படுகின்றன. இடையில் அவர் ஹீரோவாக நடித்த மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. 

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடித்துவரும் படங்களை முடித்துவிட்டு மீண்டும் திரைப்படம் இயக்கவிருக்கிறார். கில்லர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அடுத்த ஆண்டு துவங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே என இவர் இயக்கிய படங்கள் எல்லாம் பெரும் வெற்றிபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT