பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இதுவரை ரூ.500 கோடி அதிகமாக வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிக்க | தோனி தயாரிக்கும் தமிழ் படத்தின் கதாநாயகன் இவர்தான்...
இரண்டாவது இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம், 3வது இடத்தில் பாகுபலி 2, 4வது இடத்தில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம், 5வது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும்,