செய்திகள்

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் சூர்யா!

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா பெற்றார்.

DIN

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா பெற்றார்.

2020 ஆம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட 68-வது தேசிய விருதுகள் தற்போது தில்லியில் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டிருந்த சூர்யா இன்று தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார். 'சூரரைப் போற்று' படத்தில் நடித்தற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், விருதுப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த தமிழ் படமாக 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' சார்பாக அப்படத்தின் இயக்குநர் வசந்த், சிறந்த இசையமைப்பாளராக ’அல வைக்குந்தபுரமுலோ’ படத்துக்காக தமன் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான விருது 'சூரரைப் போற்று' படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்காக விருது அபர்ணா பாலமுரளிக்கு வழங்கப்பட்டது. 

மனைவி ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா

சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக ஸ்ரீகர் பிரசாத்துக்கும் சிறந்த துணை நடிகையாக அதே படத்தில் நடித்த லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்கும் சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினுக்கு கிடைத்துள்ளது. 

சூரரைப் போற்று இயக்குநர் சுதா கொங்காரா சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT