இயக்குநர் சுசீந்திரனின் புதிய படம் அறிவிப்பு
2019-ல் இரு படங்களும் 2021-ல் ஒரு படமும் 2022-ல் இரு படங்களும் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்துள்ளன.
இயக்குநர் சுசீந்திரனின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2019-ல் இரு படங்களும் 2021-ல் ஒரு படமும் 2022-ல் இரு படங்களும் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்துள்ளன. ஏஞ்சலினா என்கிற படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த வருடம் வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே என இரு படங்கள் வெளியான நிலையில் அடுத்தப் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சுசீந்திரன்.
விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் வள்ளி மயில் என்கிற படத்தை இயக்குகிறார் சுசீந்திரன். இப்படத்தின் படப்பிடிப்பு மே 16 அன்று திண்டுக்கல்-லில் தொடங்குகிறது. இமான் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.