யாரடி நீ மோகினி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தன. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தமன்னாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?
இந்நிலையில் படக்குழு சந்தித்த புகைப்படங்களை நேற்றிரவு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: வேலையில்லா பட்டதாரி தெலுங்கு மறுவெளியீடு: கொண்டாடிய ரசிகர்கள்!
தனுஷ் தனது 50வது படத்தினை இயக்குவதில் மும்முரமாக உள்ளார். நடிகை நித்யா மேனன் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தனுஷ்- நித்யாமேனன் ஜோடி மீண்டும் எப்போது வருமென ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.