நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
இதையும் படிக்க | ஜெய் பீம் படத்திற்கு ஏன் தேசிய விருது இல்லை?: நானி, பி.சி. ஸ்ரீராம் உள்பட பலரும் எதிர்ப்பு!
இரண்டாவது வார இறுதி நாள்களை கடந்துள்ள ஜெயிலர் 14-வது நாளில் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு ஜெயிலர் வெற்றியை முன்னிட்டு படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். அந்த கேக்கில் ‘தலைவர் நிரந்தரம்’ என எழுதப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.