செய்திகள்

நடிகை அனுஷ்கா அரிய வகை நோயால் அவதியா?

DIN

தென்னிந்திய திரையுலக முன்னணி நடிகையான அனுஷ்கா அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருவதாக வெளியாகி உள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சமீப காலங்களாக முன்னணி நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை நோய்கள் குறித்து வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். 

அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். 

இவரைத் தொடர்ந்து நடிகை மம்தா மோகன் தாஸ், தன்னுடைய நிறம் மாறி வரும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், நடிகை ஸ்ருதி ஹாசன், பூனம் கவுர் போன்ற நடிகைகளும் தங்களுடைய நோய் பாதிப்புகள் குறிந்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது பிரபல நடிகை அனுஷ்கா தான் அரிய வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, எனக்கு அரிதான சிரிக்கும் நோய் உள்ளது. சிரிப்பது எல்லாம் ஒரு நோயா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், சிரிக்க வேண்டிய சூழ்நிலையில் நான் சிரிக்க ஆரம்பித்தால் அதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். 

மேலும், படப்பிடிப்பில் சிரிக்க ஆரம்பித்தால் தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை சிரிப்பேன், அப்போது படப்பிடிப்பைக் கூட நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

நடிகை அனுஷ்காவின் இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT