செய்திகள்

தேசிய விருது பெற்ற இயக்குநரின் படத்தில் சரத்குமார்! 

DIN

90களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார். பின்னர் இரண்டாயிரத்துக்குப் பிறகு துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடைசியாக 2017இல் சென்னையில் ஒருநாள் 2 படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

தற்போது 888 புரடக்‌ஷன் செல்லுலாய்டு கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மலையாளத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ளார். 

ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி இதில் இணைந்துள்ளார். ஆன்ந்த் நாயர் ஒளிப்பதிவில் ஜெஸ்சி கிப்ட் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT