செய்திகள்

'எதிர்நீச்சல்' தொடரிலிருந்து விலகும் நடிகை? ரசிகர்கள் அதிர்ச்சி

எதிர்நீச்சல் தொடரை திருச்செல்வம் இயக்குகிறார். ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். 

DIN


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினி அந்த தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர்களில் எதிர்நீச்சலும் ஒன்று. ஒளிபரப்பான சில மாதங்களிலேயே மக்கள் கொண்டாடும் அளவுக்கு அதிகபடியான ரசிகர் கூட்டம் அந்த தொடருக்கு உண்டு. 

வாரத்தில் ஒளிபரப்பாகும் ஏதேனும் ஒரு காட்சி (எபிஸோட்) சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறும். இளைய தலைமுறையினர் பலரும் மீம்ஸ்களாக எதிர்நீச்சல் மாமனார் கதாபாத்திரத்தை பகிரத் தொடங்கினர். 

அந்த அளவுக்கு வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் எதிர்நீச்சல் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் பிரியதர்ஷினி, விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை என்ற தொடரிலும் நடித்து வருகிறார். 

எனினும், பிரியதர்ஷினி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், சமூக வலைதலங்களில் பரவும் இந்த தகவலால் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

எதிர்நீச்சல் தொடரிலிருந்து பிரியதர்ஷினி விலக வேண்டாம் என்றும், அவர் விலகினால், அவருக்கு இணையாக வேறு யாரையும் பொருத்திப்பார்க்க முடியாது என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

எதிர்நீச்சல் தொடரை திருச்செல்வம் இயக்குகிறார். ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT