'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல்!
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்வு குக் வித் கோமாளி. மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகவுள்ளது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், வரும் சனிக்கிழமை(ஜன.28) முதல் குக் வித் கோமாளி போட்டி ஒளிபரப்பபடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிகிறார்.
இந்நிலையில், கடந்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்த பாலா, புகழ், சிவாங்கி ஆகியோர் தற்போது திரைப்பட வாய்ப்பு கிடைத்து பிஸியாக நடித்து வருவதால் அவர்கள் மூவரும் பங்கேற்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களில் இருந்த புகழ், பாலா, ஷிவாங்கி, பவித்ரா போன்றவர்கள் வெள்ளித் திரையில் படங்களில் நடித்து வருகின்றனர்.
மேலும், புதிய கோமாளிகளாக பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா, சுனிதா, மணிமேகலை உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 'சூர்யா 42’ படப்பிடிப்பு தீவிரம்
அதேபோல், குக்குகளாக தொகுப்பாளினி அர்ச்சனா, பிக்பாஸ் பிரபலம் தாமரைச் செல்வி, நடிகை வாசுகி, விசித்ரா, விஜயலட்சுமி, அகத்தியன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் உறுதியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.