கேங்க்ஸ்டராக களமிறங்கும் தனுஷ்!
தன் 50-வது படத்தில் கேங்க்ஸ்டராக களமிறங்குகிறார் நடிகர் தனுஷ்.
செய்திகள்கேங்க்ஸ்டராக களமிறங்கும் தனுஷ்!
தன் 50-வது படத்தில் கேங்க்ஸ்டராக களமிறங்குகிறார் நடிகர் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கவுள்ளார். சில நாள்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சுதிப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும், வடசென்னையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: சலார் - கேஜிஎஃப் என்னென்ன ஒற்றுமைகள்?
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக நடிகர் தனுஷ் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ராயர் என்கிற தலைப்பில்(தகவல்) உருவாகவுள்ள இப்படத்தில் தனுஷ் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.