செய்திகள்

தமிழில் ரீமேக்காகும் பிரபல தெலுங்கு சீரியல்!

கதாநாயகி யார் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

DIN


தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்களைக் கவர்ந்த தொடர், தமிழ் மொழியில் எடுக்கப்படவுள்ளது. 

ஒருசில தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையில், ஒருசில தொடர்கள் காப்புரிமை பெற்று புதிதாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப எடுக்கப்படுகின்றன. 

தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான நுவ்வு நேனு பிரேமா என்ற தொடர் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடர் இளம் தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் சுவாமிநாதன் ஆனந்தராமன் மற்றும் பவித்ரா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர்.

தமிழுக்கு வரவுள்ள நுவ்வு நேனு பிரேமா தொடர் 

இந்தத் தொடர் தற்போது தமிழ் மொழியில் எடுக்கப்படவுள்ளது. இதிலும் சுவாமிநாதன் ஆனந்தராமன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், தமிழில் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர். 

இவருக்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT