செய்திகள்

இல்லாமல் போயும் இருந்து கொண்டே இருப்பவர் என் அன்னய்யா...: எஸ்.பி.பி. குறித்து கமல் நெகிழ்ச்சி! 

நடிகர் கமல்ஹாசன் பிரபல மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

நடிகர் கமல்ஹாசன் பிரபல மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 

16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.பி.பி. தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் முத்திரை பதித்து ஆச்சர்யப்படுத்தியவர். 2020ஆம் ஆண்டு கரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்டு பின்னர் இதய நோயினால் உயிரிழந்தார். இருப்பினும் அவரது பாடல்கள் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களின் மனதில் சாகாவரம் கொண்டு வாழ்கிறது.   

இன்று எஸ்பிபி பிறந்தநாளினை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலும் கடல் காற்றும்... அனிதா சம்பத்!

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT