செய்திகள்

நல்ல கதாபாத்திரத்திற்குக் காத்திருக்கும் ஷ்ரேயா ரெட்டி!

நடிகை ஷ்ரேயா ரெட்டி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைக் கேட்டு வருகிறார்.

DIN

சில நடிகைகள் தோற்றத்திலேயே தங்கள் ஆளுமையைக் காட்டக்கூடியவர்கள். அந்த வகையில் மிக உறுதியான பெண் என்கிற அடையாளத்துடன் கேமராவில் தோன்றக்கூடிய நடிகை ஷ்ரேயா ரெட்டி. 

விஷால் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் ஈஸ்வரியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் ஷ்ரேயா. அதன் பிறகு வெயில், காஞ்சிவரம் உள்ளிட்ட சில படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்தவர் திருமணத்திற்குப் பின் சினிமாவிலிருந்து விலகினார். 

மீண்டும், 10 ஆண்டுகளுக்குப் பின்  சினிமாவில் நடிக்கத் துவங்கியுள்ளார். அவர் நடிப்பில் தமிழில் ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் வெளியான ‘சுழல்’ இணையத் தொடர் நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததுடன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. தற்போது, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே ஷ்ரேயா தேர்ந்தெடுத்து வருகிறாராம். சிறிய வேடமாக இருந்தாலும் தன் நடிப்பு தனியாகத் தெரிய வேண்டும் என்பதில் கவனமுடன் இருப்பவருக்கு சலார் இந்திய அளவில் கவனத்தைப் பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

SCROLL FOR NEXT