செய்திகள்

மலேசிய குகைக் கோயிலில் சீரியல் நடிகை!

DIN


மகாநதி தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க திவ்யா கணேஷ் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், கோயிலுக்குச் சென்ற அவரின் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை பார்த்திபா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் லஷ்மி பிரியா, அனந்தராமன், ருத்ரன் பிரதீவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

பார்த்திபா - திவ்யா கணேஷ்

மகாநதி தொடரில் கங்கா பாத்திரத்தில் நடித்துவந்த பார்த்திபா, அத்தொடரிலிருந்து விலகியுள்ளார். மலையாள சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், அவர் மகாநதியிலிருந்து விலகினார்.

நடிகை திவ்யா கணேஷ்

பார்த்திபாவுக்கு பதிலாக கங்கா பாத்திரத்தில் நடிக்க நடிகை திவ்யா கணேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம் மகாநதி தொடரில் திவ்யா கணேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார். 

மலேசிய குகைக்கோயில் முன்பு திவ்யா கணேஷ்

அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கார்த்திகை தீபத்தையொட்டி மலேசியாவிலுள்ள குகைக்கோயிலில் நடிகை திவ்யா கணேஷ் சாமி தரிசனம் செய்தார். அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீத மாற்றங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு காா்கே கடிதம்: தோ்தல் ஆணையம் கண்டனம்

வைகாசித் திருவிழா: காஞ்சி வரதா் கோயில் தோ் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை: கனடா குறித்து ஜெய்சங்கா் கருத்து

இந்திய தோ்தலில் தலையீடு? ரஷியா குற்றச்சாட்டை நிராகரித்தது அமெரிக்கா

பாா்வைத்திறன் குறையுடைய மாணவா் சாதனை

SCROLL FOR NEXT