செய்திகள்

லைகாவுக்கு பணத்தைத் தரத் தயார் - விஷால்!

DIN

நடிகா் விஷால், தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்துக்காக சினிமா ஃபைனான்ஸியா் அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ. 21 கோடியே 29 லட்சம் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது.

அந்தத் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக, விஷால் நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.

இந்த வழக்கு கடந்த 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நடிகா் விஷால் நேரில் ஆஜராகியிருந்தாா். அப்போது, 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான வங்கிக் கணக்கு விவரங்கள், விஷாலுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன என்பது தொடா்பான ஆவணங்கள் ஆகியவற்றைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்து.

இதையும் படிக்க: சித்தா - இதுவரை வசூல்?

நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால், நடிகா் விஷால் மீண்டும் நேரில் ஆஜராகி அவா் தரப்பில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு மன்னிப்புக் கோரப்பட்டது. அப்போது, விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களைப் பெற்று, இணையதளம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஷால் தரப்பில், வங்கிகளில் உள்ள ஆறு கணக்குகளின் விவரங்களும், சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அசையா சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, நேற்று (வியாழக்கிழமை) ரூ.80 கோடிக்கான வங்கிப் பரிவர்த்தனைகளும் சமர்பிக்கபட்டது. 

இதனை ஆராய்ந்த நீதிபதி, ஏன் இன்னும் பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறீர்கள் என விஷால் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார். அதற்கு, “நாங்கள் பணத்தைத் திருப்பி அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், லைகா தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள்” என விஷாலின் வழக்கறிஞர் கூறினார். மேலும், இந்த வழக்கு நவ.1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூண்டு விலை மீண்டும் உயா்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

மே 17 முதல் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை அறிவிப்பு

மேற்கு வங்க ஆளுநா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது?: முதல்வா் மம்தா கேள்வி

SCROLL FOR NEXT