செய்திகள்

தேசிய விருது விழா: விருதைப் பெற்றார் மணிகண்டன்!

கடைசி விவசாயி திரைப்படத்திற்காக இயக்குநர் மணிகண்டன் தேசிய விருதைப் பெற்றார்.

DIN

மத்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு அளிக்கப்படும் தேசிய  திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. 

நாட்டின் 69-வது தேசிய விருதுகள் பட்டியலில் மொழிவாரித் தேர்வில் தமிழின் சிறந்த படமாக கடைசி விவசாயி  தேர்வாகியிருந்தது. அதற்காக,  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து படத்தின் இயக்குநர் மணிகண்டன் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.

இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கும் சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. நல்லாண்டி மறைந்ததால், அவர் குடும்பத்தினர் சார்பில் விருதை மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.

சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலுக்காக ஷ்ரேயா கோஷலுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுனும் நடிகைக்கான விருதை ஆலியா பட்டும் பெற்றுக்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT