லிங்குசாமி படத்தில் நாயகனாக சூரி?
இயக்குநர் லிங்குசாமி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஆனந்தம்’, ‘ரன்’, 'சண்டக்கோழி’, ‘பையா’ உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தன்னை சிறந்த இயக்குநராக நிரூபித்தவர் இயக்குநர் லிங்குசாமி.
ஆனால், அவர் அடுத்தடுத்து இயக்கிய, ‘வேட்டை’, ‘அஞ்சான்’, ‘சண்டைக்கோழி - 2’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால், லிங்குசாமியை அணுக தயாரிப்பாளர்கள் தயங்கி வந்தனர்.
இதையும் படிக்க: இது பிளாக்பஸ்டர்தான்.. ரசிகர்கள் பாராட்டில் இறைவன் டிரைலர்!
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் லிங்குசாமி புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் அதில் நாயகனான நடிகர் சூரி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.