தமிழ்த் திரையுலகின் பெரும் அடையாளம்: வடிவேலுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!
நடிகர் வடிவேலு பிறந்தநாளுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி - 2’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. மேலும், தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.
மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை இனி நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக, நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார். தனது சம்பளத்தை உயர்த்தியதகவும் தகவல்கள் வெளியானது.
Advertisement
Advertisement
மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு தனது வழமையான நகைச்சுவை பாணியை கைவிட்டு புதுமாதிரியாக நடித்திருந்தார். மாமன்னன் படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள்: யாரிந்த துனித் வெல்லாலகே?
இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் பெரும் அடையாளமாக இருக்கும் அன்பு அண்ணன் வைகைபுயல் வடிவேல் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மாமன்னன்” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.