செய்திகள்

முற்றிலும் பொய்யானது: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்! 

நடிகை நித்யா மேனன் குறித்து பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானதென கூறியுள்ளார். 

DIN

2006-ல் கன்னட படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக  அறிமுகமானவர்  நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார்.

குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. 

தற்போது, சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில், அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’ தொடர் அமேசான் பிரைம் தளத்தில் செப்.28-ல் வெளியாகிறது. 

“தெலுங்கு சினிமாவில் எனக்கு இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டேன். முக்கியமாக, தமிழ் ஹீரோ நடிகர் ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்” என நித்யாமேனன் கூறியதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், இது முற்றிலும் பொய்யானதென நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். மேலும் இது மாதிரி எந்த நேர்காணலும் தான் தரவில்லையெனவும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT