செய்திகள்

மகன்களுடன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா!

தங்கள் குழந்தைகளின் முகத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர்.

DIN

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். 

மேலும், குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடாமல் தவிர்த்து வந்தனர். சமீபத்தில் நயன்தாரா இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி அதில், ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘ஹுக்கும்’ பாடல் வரிகளுடன்  ‘நான் வந்துட்டேன்னு சொல்லு..’ எனப் பதிவிட்டு மகன்களான உயிர், உலக் ஆகியோரின் கண்ணாடி அணிந்த முகங்களை அறிமுகப்படுத்தினார். 

இந்நிலையில், குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று விக்னேஷ் சிவன் தன் மகன்களின் முகங்களை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்த பதிவில்,  “என் முகம் கொண்ட உயிர், என் குணம் கொண்ட உலக்... அப்பாவும் அம்மாவும் வாழ்வில் எதையும்விட உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள்: எஸ்.பி.வேலுமணி ஆய்வு

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

பஞ்சாப் நேஷனல் வங்கி சாா்பில் கடன் வழங்கும் முகாம்

கணக்கீட்டுப் படிவங்களைக் கணினியில் பதிவேற்றும் பணி: தோ்தல் ஆணைய இயக்குநா் ஆய்வு

குப்பை பிரச்னைக்கு தீா்வு காணக்கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT