சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் இசை நிகிழ்ச்சி நடத்தவுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் இசை நிகிழ்ச்சி நடத்தவுள்ளார்.
தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு உதவ நிதி திரட்டுவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற மார்ச் 19 ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
இத்தகவலை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின்(பெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட்மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.