கலைத்தாயின் இளைய மகன்... இயக்குநரைப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா!
வீர தீர சூரன் படத்தின் இயக்குநர் சு.அருண்குமாரை எஸ்.ஜே.சூர்யா பாராட்டியுள்ளார்.
சித்தா படத்தின் இயக்குநர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வீர தீர சூரன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வேகமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா தன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மதுரையில் நேற்றிரவு வீர தீர சூரனில் எனக்கும் நடிகர்கள் விக்ரம் மற்றும் சுராஜுக்கும் இடையேயான கிளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சியை இயக்குநர் அருண்குமார் அபாரமாக எடுத்தார். இந்தக் காட்சியை எடுப்பதற்கு முன் இயக்குநர் தன் உதவி இயக்குநர்கள் மற்றும் குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில் கடந்த 10 நாள்களாக ஒத்திகை பார்த்து வந்தார்.
எல்லாம் சரியானபோது எங்களை வரவழைத்தார். நாங்கள் 3 இரவுகள் ஒத்திகை பார்த்து நேற்று அதிகாலை 5.05 மணிக்கு நடித்து முடித்தோம். இயக்குநர் அருண்குமாரிடம் ஒன்றைச் சொல்ல வேண்டும். கலைத்தாயின் இளைய மகன் அய்யா நீர் (நீங்கள்)” எனப் பாராட்டியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் இப்பதிவு வைரலாகியுதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.