FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லேடி சூப்பர் ஸ்டாரா..? அவமானமாக இருக்கிறது: மஞ்சு வாரியர்

Updated On : 5 ஆகஸ்ட் 2024, 3:43 pm IST
மஞ்சு வாரியர்
பகிர்:

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்பது அவமானமாக இருப்பதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

1995-ல் மலையாளத்தில் நடிகையாகஅறிமுகமானவர் மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை 1998இல் திருமணம் செய்தவர் அவரை 2015இல் விவகாரத்து செய்யும்வரை திரைடங்களில் நடிக்காமல் இருந்தார்.

2015க்குப் பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும் மஞ்சு வாரியருக்கு பிருத்விராஜுன் லூசிஃபர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

Advertisement

Advertisement

தமிழில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தார். தற்போது, வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்து முடித்துள்ளார். விடுதலை - 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஃபுட்டேஜ் போஸ்டர்

இதற்கிடையே, மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகும் ஃபுட்டேஜ் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மஞ்சு வாரியர், “என்னை சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைப்பதால் சமூக வலைதளங்களில் தேவையற்ற விவாதங்கள் எழுகின்றன. தனிப்பட்ட முறையில் இது எனக்கு அவமானமாக இருக்கிறது. இந்தப் பட்டத்திற்கு பலரும் தங்களுக்கான வரையறையை வைத்திருக்கின்றனர். உண்மையில் எனக்கு எந்த பட்டமும் தேவையில்லை. ரசிகர்களின் அன்பு ஒன்றே போதுமானது.” எனக் கூறியுள்ளார்.

மஞ்சு வாரியர்

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா அவரது படங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடனே நடிப்பதும் அதே பட்டத்தை வைத்து விளம்பரங்களைக் கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments