சக்தியாக நடித்த நாயகி செளந்தர்யா ரெட்டி இன்ஸ்டாகிராம்
செய்திகள்

ஐஏஎஸ் ஆனார் சக்தி! மீனாட்சி பொண்ணுங்க தொடர் முடிந்தது!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த மீனாட்சி பொண்ணுங்க தொடர் முடிவுக்கு வந்தது.

DIN

சின்னத்திரையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மீனாட்சி பொண்ணுங்க தொடர் முடிவுக்கு வந்தது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

தொடக்கத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர், இடையில் சற்று டிஆர்பியை இழந்தாலும், ஜீ தமிழ் முதன்மை தொடர்களில் இன்றாக நீடித்து வந்தது.

இறுதி நாள் படப்பிடிப்பில்....

கணவனால் ஏமாற்றப்பட்ட மீனாட்சி (தாய்), தனது 4 மகள்களையும் வளர்த்து சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வைக்கப் போராடுகிறார். 4 மகள்களும் தங்களின் கல்லூரி, திருமண வாழ்வில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அந்த சவால்களைக் கடந்து லட்சியங்களை அப்பெண்கள் அடைவதே மீனாட்சி பொண்ணுங்க தொடரின் கதை.

இத்தொடரில் நடிகை செளந்தர்யா ரெட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக நடிகர் ஆர்யன் நடித்திருந்தார். இவர்களுடன் பிரனிகா தக்‌ஷு, சசிலயா, ஆனந்த் மெளலி, சுபத்ரா, பிரபாகரன், சுகன்யா, ஹேமாதயாள், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படப்பிடிப்பு இறுதி நாளில் நாயகி செளந்தர்யா ரெட்டி

2022 ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவந்த இந்தத் தொடர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஒளிபரப்புடன் முடிந்தது. இதில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த நாயகி சக்தி, ஐஏஎஸ் ஆவதைப் போன்று தொடர் நிறைவு பெற்றது.

தனது மகள்களுடன் தாய் மீனாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT