முகப்பு
செய்திகள்

புதிய வாய்ப்புகள் பெறும் எதிர்நீச்சல் கரிகாலன்!

எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் விமல், புதிய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

Updated On : 6 ஆகஸ்ட் 2024, 4:52 pm IST
விமல் குமார் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் விமல், புதிய வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் சொக்கத்தங்கம் என்ற புதிய தொடரில் நடிகர் விமல் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரிலும் நடிகர் விமல் நடிக்கவுள்ளார். இத்தொடரில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அவர் நடிக்கவுள்ளார்.

Advertisement

Advertisement

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரையின் கணவராக, கலாட்டா செய்து பலரை சிரிக்க வைத்த கரிகாலன், கார்த்திகை தீபம் தொடரிலும், வில்லியாக உள்ள ரம்யாவின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை / கரிகாலன் - இன்ஸ்டாகிராம்

இதனால் ரம்யாவின் கணவராகவும், அவரின் வில்லத்தனங்களுக்கு பதிலடி கொடுக்கும் நைய்யாண்டி நிறைந்த பாத்திரத்திலும் விமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திகை தீபம் தொடரில் ரம்யா பாத்திரத்தில் நடிகை நந்திதா ஜெனிஃபர் நடித்து வருகிறார். இவர் பாரதிராஜாவின் ஈரநிலம் படத்தில் நாயகியாக நடித்தவர்.

நடிகை நந்திதா ஜெனிஃபர் - இன்ஸ்டாகிராம்

சன் தொலைக்காட்சியின் நாகவல்லி, லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ், அம்மன், விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி ஆகிய தொடர்களிலும் நந்திதா நடித்துள்ளார்.

கார்த்திகை தீபம் தொடரில் பலரின் வெறுப்புகளை சம்பாதித்த வில்லியாக நடித்து வருகிறார். அவருக்கு விமல் ஜோடியாவது பொருத்தமான தேர்வு என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் வரவேற்பில் விமல் - இன்ஸ்டாகிராம்

கார்த்திகை தீபம் தொடரில் விமல் நடிப்பது உறுதியானாலும், அவரின் பாத்திரம் இதுவரை உறுதியாகவில்லை. கார்த்திகை தீபம் குழு தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments