முகப்பு
செய்திகள்

அமரன் டப்பிங் பணிகளில் சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி அமரன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 10:33 AM
சாய் பல்லவி
பகிர்:

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன.

குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் திரைப்படத்திற்கு தென்னிந்தியா  முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. அமரன் (தமிழ்), தண்டேல் (தெலுங்கு) எனும் படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அமரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

அமரன் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. இதன் டப்பிங் பணிகளை சாய் பல்லவி மும்பையில் தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →