FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் உறவில் விரிசல்..? இன்ஸ்டா பதிவால் குழப்பம்!

ஐஸ்வர்யா ராயுடன் விரிசல்! அபிஷேக் பச்சனின் இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குழப்பம்

Updated On : 13 ஆகஸ்ட் 2024, 4:16 pm IST
பகிர்:

ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஆராத்யா பச்சன் என்ற மகளும் இருக்கிறார்.

இந்த நிலையில், அண்மை காலமாக அபிஷேக் பச்சன்(48) - ஐஸ்வர்யா ராய்(50) தம்பதியினரிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பையில் மாபெரும் பொருட்செலவில் நடைபெற்ற தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில், இவர்கள் இருவருக்கும் இடையேயான விரிசல் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் திருமண விருந்துக்கு சென்றிருந்ததையும், மறுபுறம் இத்திருமண விழாவுக்கு அபிஷேக் பச்சன் தனியாகச் சென்றிருந்ததையும் காண முடிந்தது.

இந்த நிலையில், பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை காணச் சென்ற அபிஷேக் பச்சன், அங்கே நீரஜ் சோப்ராவை பார்த்தது, மைதானத்தில் வீரர்களை உற்சாகப்படுத்தியது, ஒலிம்பிக் மைதானத்தில் நம் தேசியக் கொடியைக் கண்டது பெருமைமிகு தருணமாக அமைந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், பார்வையாளர்கள் தனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதைக் குறித்து ஏதேனும் கேள்வி கேட்காமலும், கருத்து தெரிவிக்காமலும் இருப்பதற்காக ‘கமெண்ட்ஸ்’ பிரிவை நீக்கிவிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த இன்ஸ்டா பதிவால் பார்வையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments