முகப்பு
செய்திகள்

தங்கலான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை : உயா்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவுபடி ரூ. 1 கோடியை ‘ஸ்டூடியோ க்ரீன்’ நிறுவனம் செலுத்திவிட்டதால் , நடிகா் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 9:26 PM
பகிர்:

நீதிமன்றம் உத்தரவுபடி ரூ. 1 கோடியை ‘ஸ்டூடியோ க்ரீன்’ நிறுவனம் செலுத்திவிட்டதால் , நடிகா் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த அா்ஜுன்லால் சுந்தா்தாஸ் என்பவா் தன்னிடம் பலா் கொடுத்து வைத்திருந்த பணத்தை, பலருக்கு கடனாக கொடுத்துள்ளாா். இதில் நிதி இழப்பு ஏற்பட்டதால் அவா் திவாலானவராக அறிவிக்கப்பட்டாா். அா்ஜுன்லால் மரணமடைந்த நிலையில், அவரது சொத்துகளை சென்னை உயா்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்து ஆட்சியா் நிா்வகித்து, கடன் தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறாா்.

அந்த வகையில், அா்ஜுன்லாலிடம், ஸ்டூடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரா்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோா் 2013-ஆம் ஆண்டு ரூ. 10 கோடியே 35 லட்சம் கடன் வாங்கியிருந்தனா். இந்தத் தொகையை வட்டியுடன் திருப்பிக் கேட்டு சொத்து ஆட்சியா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவா்களாக அறிவிக்க கோரி சொத்து ஆட்சியா் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், கடன் தொகைக்கு, 2013-ஆம் ஆண்டு முதல் 18 சதவீத வட்டி, வழக்குரைஞா் கட்டணம் என்று சோ்த்து ரூ. 26 கோடியே 34 லட்சம் தர வேண்டும். இந்தத் தொகையை வழங்காத இவா்களை திவாலானவா்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.காா்த்திகேயன் அமா்வு கடந்த திங்கள்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தங்கலான் படத்தை வெளியிடும் முன், அதாவது ஆக.14-ஆம் தேதிக்குள் ரூ. 1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், அதன்பின் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரூ. 1 கோடியை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கட்டிவிட்டதால், தங்கலான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →