முகப்பு
செய்திகள்

முக்கோண காதல் கதையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

அன்னம் தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.

Updated On : 2 டிசம்பர் 2024, 2:58 pm IST
அன்னம் தொடரில் திவ்யா கணேஷ்.
பகிர்:

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ், புதிய தொடரொன்றில் நடிக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் இன்றுமுதல்(டிச. 2) ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் அன்னம். இத்தொடரில் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனிஃபர் பாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை திவ்யா கணேஷ் நடிக்கிறார்.

மகாநதி தொடரில் நடித்துவந்த நடிகை திவ்யா கணேஷ், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இத்தொடரில் இருந்து விலகினார்.

Advertisement

Advertisement

திவ்யா கணேஷ்.

இவர் முன்னதாக கேளடி கண்மணி, சுமங்கலி, லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை திவ்யா கணேஷ்.

இந்த நிலையில், தற்போது திவ்யா கணேஷ் அன்னம் தொடரில் இணைந்துள்ளார். இது தொடர்பான முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

அயலி இணையத் தொடரில் தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் நடித்து பிரபலமான அபி நட்சத்திரா அன்னம் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். கனா காணும் காலங்கள் -2 தொடர் பிரபலம் பரத் குமார் நாயகனாக நடிக்கிறார்.

மாமன் மகனான கார்த்திக்கை(பரத் குமார்) காதலிக்கும் அத்தை மகளான அன்னம்(அபி நட்சத்திரா), ஆனால் கார்த்திக், ரம்யாவை (திவ்யா கணேசன்) விரும்பும் முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளதாக அன்னம் தொடரின் முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.

மேலும் இத்தொடரில் மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்தொடர் இன்றுமுதல்(டிச. 2) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சுந்தரி தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், இத்தொடருக்கு மாற்றாக அன்னம் தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments