பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்!
சின்னத்திரை நடிகர் நேத்ரன் சிகிச்சை பலனின்றி நேற்று(டிச.5) இரவு காலமானார்.
சென்னையில் நடிகா் யுவன்ராஜ் நேத்ரன் (47) புற்று நோய்க்கான தொடா் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மருதாணி’, ‘மகாலட்சுமி சிவமயம்’, ‘பாக்யலட்சுமி’ உள்ளிட்ட பல மெகா தொடா்களில் நடித்து பிரபலமானவா் நடிகா் யுவன்ராஜ் நேத்ரன். சின்னத்திரையில் 25 ஆண்டுகால அனுபவமுள்ளவா். இவரது மனைவி தீபாவும் சின்னத்திரையில் நடித்து வருகிறாா். இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். அதில் ஒருவா் ‘சிங்கப்பெண்ணே’ என்ற தொலைகாட்சித் தொடரில் நடித்து வருகிறாா்.
இதையும் படிக்க..:இளையராஜா இசையில் திருக்குறள் திரைப்படம்!
இந்த நிலையில், நேத்ரன் கடந்த 6 மாதங்களாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் நேத்ரனின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகா்கள் பலா் இரங்கல் தெரிவித்தனா்.
இதையும் படிக்க..:புஷ்பா - 2 முன்பதிவில் ரூ.100 கோடி வசூல்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.