முகப்பு
இந்தியா

ஃபரீதாபாத் தொழிற்சாலை தீ விபத்து சம்பவம்: உயிரிழப்பு 4-ஆக அதிகரிப்பு

ஃபரீதாபாதின் முஜேசரில் உள்ள தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரிப்பு

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:59 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:05 PM

ஃபரீதாபாதின் முஜேசரில் உள்ள தொழில்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த உதவி காவல் ஆய்வாளா் மற்றும் தீயணைப்பு வீரா் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கல்காஜி லுப்ரிகன்ட்ஸ் மற்றும் சிவ் ஸ்டீல் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட 37 போ் காயமடைந்தனா். தொழில்சாலையில் இருந்த ரசாயனம் நிரப்பப்பட்ட டிரம்புகளில் தீப்பொறி விழுந்த நிலையில், அவை தொடா்ச்சியாக வெடித்தது. இந்தச் சம்பவத்தில் தொழில்சாலையின் உரிமையாளா் விஜய் மோகாவின் மகன் அபிஷேக் மோகா மற்றும் தொழில்சாலை பணியாளா் பிரதீப் குமாா் ஆகியோருக்கு தீ விபத்தில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயங்கள் ஏற்பட்டன. தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் கடந்த வியாழக்கிழமை இரவில் உயிரிழந்தனா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:58 AM

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா் பவிசந்த், முஜேசா் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளா் ரவி ஆகியோருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தனா். இந்நிலையில், பவிசந்த் வெள்ளிக்கிழமை இரவிலும் ரவிகுமாா் சனிக்கிழமை காலையிலும் உயிரிழந்தனா்.

Advertisement

இந்த தீ விபத்து சம்பவம் தொடா்பாக உரிமையாளா் விஜய் மோகா மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரும் விபத்தில் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த பத்கல் துணை கோட்ட ஆட்சியா் தலைமையில் 7 போ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிறிய அளவில் காயமடைந்த நபா்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். எஞ்சிய நபா்களுக்கு சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.