முகப்பு
செய்திகள்

ஓடிடியில் வெளியானது ‘அமரன்’ திரைப்படம்!

நடிகர் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் ஓடிடியில் இன்று(டிச.5) வெளியானது.

Updated On : 5 டிசம்பர் 2024, 10:51 am IST
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் ஓடிடியில் இன்று(டிச.5) வெளியாகியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம், கடந்த தீபாவளியையொட்டி, திரையரங்குகளில் வெளியானது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

Advertisement

Advertisement

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட அமரன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

உலக அளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் ரூ. 42.3 கோடி வசூலித்தது.

தொடர்ந்து ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலக அளவில் ரூ. 300 கோடிக்கு மேல் அமரன் படம் வசூலித்தது.

இந்நிலையில் அமரன் படம் டிசம்பர் 5 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதன்படி, நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் உரிமையை ரூ. 60 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.