செய்திகள்

ஜெர்மனியில் மகேஷ் பாபு! ராஜமௌலி படத்துக்காக பயிற்சியா? 

DIN

குண்டூர் காரம் வெற்றிக்குப் பிறகு நடிகர் மகேஷ் பாபு ஜெர்மனி சென்றுள்ளார். ஜெர்மனியில் தான் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் உறையும் பனியில் காட்டில் சாகசப் பயணம் என பதிவிட்டுள்ளார். 

மகேஷ் பாபுவின் 29வது படமாக இயக்குநர் ராஜமௌலி இயக்க உள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெர்மனி சென்றுள்ள மகேஷ் பாபு உடற்பயிற்சி நிபுணர் டாக்டர் ஹாரி கோனிக் உடன் கடுமையான பயிற்சி எடுத்து வருகிறார். இது ராஜமௌலி இயக்க்கும் படத்துக்காக என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் படக்குழு இதுகுறித்து எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. 

இயற்கையை ரசிக்கும்படியாக புகைப்படங்களை மகேஷ் பாபு பகிர்ந்துள்ளார். இந்தப் பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் ராஜமௌலி படத்துக்கான ஒரு முன் தயாரிப்பானதாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் படத்தில் பாலிவு நடிகை தீபிகா படுகோன் இணைந்து நடிப்பாரெனவும் இந்தோனேஷியன் நடிகை செல்ஷீ இஸ்லான் போன்ற முக்கியமான சினிமா பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ஆவது சுற்றில் மகளிர் இரட்டையர்கள்

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT