சமந்தா டப்பிங்! எந்தப் படத்திற்காக?
நடிகை சமந்தா டப்பிங் பேசும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.
மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் ஆயுர்வேதா சிகிச்சை எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி திரைப்படத்தில் சமந்தா நடித்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement
மேலும், அவர் தன்னுடைய உடல் நிலை குறித்து அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
இதையும் படிக்க: மதுரையிலிருந்து ரோட்டர்டம் வரை..!
இந்நிலையில், சமந்தா டப்பிங் பேசும் புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. காரணம், கடந்த சில மாதங்களாக சினிமா சார்ந்து சமந்தா எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்தார்.
தற்போது, ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் உருவாகும் ‘சிடாடல்’ படத்தில் சமந்தா நடித்து வருவதால், அத்தொடருக்காக டப்பிங் பேசிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஆனால், இப்புகைப்படத்தில் சமந்தாவின் வலது கையில் அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதற்கான அடையாளம் உள்ளது. இது, ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.