மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
தற்போது, வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் 'பி.டி. சார்’ படத்தில் நடித்திருந்தார். கலவையாம விமர்சனங்களைப் பெற்ற இப்படத்துக்கு 2 படங்களில் நடித்து வருவதாக ஹிப்ஹாப் ஆதி கூறியிருந்தார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஹிப்ஹாப் ஆதியிடம் ரோஹித் சர்மா என நினைத்து பேசிய விடியோ வைரலாகி வருகிறது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, “நான் ரோஹித் சர்மா மாதிரியா இருக்கேன்?” எனக் கேட்டு ஜாலியாக பதிவிட்டுள்ளார்.
இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. அதனால் இந்திய அளவில் ரோஹித் சர்மா பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியை ரசிகர் ஒருவர் ரோஹித் என நினைத்தது இணையத்தில் சிரிப்பலைகளை வரவழைத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.