தமிழில் நாயகனாகும் சிவராஜ்குமார்!
Updated On : 14 ஜூலை, 2024 at 1:55 PM
நடிகர் சிவராஜ்குமார் தமிழ் படமொன்றில் நாயகனாக நடிக்கிறார்.
கன்னட சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனான இவர், கன்னட மக்களிடம் பெரிய மதிப்புடன் இருப்பவர்.
ஜெயிலர் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்த சிவராஜ்குமார் தமிழ் ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றார். இதனால், தமிழ் வாய்ப்புகள் அவரை நோக்கிச் சென்றன.
Advertisement
தற்போது, இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் ஜாவா என்கிற புதிய படத்தில் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.