ஷாருக்கான் படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன்! அமிதாப் பச்சன் பதிவு!
நடிகர் ஷாருக்கானின் புதிய படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
நடிகர் ஷாருக்கானின் புதிய படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
ஷாருக்கானின் நடிப்பில் கடைசியாக வெளியான பதான், ஜவான், டன்கி திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. தற்போது கிங் எனும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை சுஜோய் கோஷ் இயக்குகிறார். அதில் ஷாருக்கானின் மகளும் நடிக்கவிருக்கிறார். மேலும் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவை அமிதாப் பச்சன் பகிர்ந்து, “ஆல் தி பெஸ்ட் அபிஷேக். இதுதான் சரியான நேரம்” எனக் கூறியுள்ளார். ரசிகர் பகிர்ந்த பதிவில், “அபிஷேக் சார் வில்லனாக நடிக்கும்போது அவரால் எவ்வளவு தரமான நடிப்பை தர முடியுமென அவரின் பிரீத் இன் டூ த ஷேடோவ், ராவணன், பிபி பார்த்தவர்களுக்கு தெரியும். எப்போதும் அவரை குறைவாக மதிப்பிடாதீர்கள்” எனக் கூறுவார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்தினை பதான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் தயாரிக்க உள்ளார். 2014இல் வெளியான ஹேப்பி நியூ இயர் படத்தில் ஏற்கனவே அபிஷேக் பச்சன், ஷாருக்கானுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் மிகப்பெரிய கமர்சியல் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை. இந்தக் கூட்டணி அமைந்தால் சிறப்பாக இருக்குமென ரசிகர்கள் கமெண்டுக்களில் கூறிவருகிறார்கள்.
அமிதாப் பச்சன் கல்கி 2898 ஏடி படத்தில் கலக்கி இருந்தார். அபிஷேக் பச்சன் கடைசியாக பால்கி இயக்கத்தில் கூமெர் படத்தில் நடித்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.